என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இனி இதற்குத் தடை- தலிபானின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு
Byமாலை மலர்28 Sep 2021 9:41 AM GMT (Updated: 28 Sep 2021 10:49 AM GMT)
தலிபான் அமைப்பின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பு, அடுத்தடுத்து தடை அறிவிப்புகளையும், அதிர்ச்சி நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றது.
அந்த வகையில் அந்த நாட்டில் ஹெல்மண்ட் மாகாணத்தில் ஆண்களின் தாடியை வெட்டுவதற்கோ, மழிப்பதற்கோ முடிதிருத்தம் செய்யும் தொழிலாளிகளுக்குத் தடை விதித்து தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதேபோல வித வித வடிவிலான சிகை அலங்காரம் செய்து கொள்வதையும் தலிபான்கள், ஹெல்மண்ட் மாகாணத்தில் தடை விதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், சலூன்களில் பாட்டு மற்றும் இசை சார்ந்து எதையும் ஒலிக்கச் செய்யக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
தலிபான் அமைப்பின் பழமைவாத கொள்கைகளால் பல்வேறு மனித உரிமை மீறல்கள் அரங்கேறி வருவதாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், முடி திருத்தம் செய்வதிலும் அந்த அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதையும் படியுங்கள்... உள்ளாட்சி தேர்தல்- விதவிதமான சின்னங்களால் வண்ணமயமாகும் கிராமப்புற சுவர்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X