என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கேட்கும் சீரம் நிறுவனம்
Byமாலை மலர்23 Sep 2021 9:10 PM GMT (Updated: 23 Sep 2021 9:10 PM GMT)
அவசரகால பயன்பாட்டுக்காக நோவோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் சீரம் நிறுவனம் மனு அளித்துள்ளது.
லண்டன்:
இந்தியாவின் சீரம் நிறுவனமும், அமெரிக்காவின் நோவோவேக்ஸ் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி ஒன்றை தயாரித்துள்ளன. கொரோனாவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 90 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக கடந்த ஜூன் மாதம் இந்த நிறுவனங்கள் அறிவித்திருந்தன.
இந்நிலையில், இந்த தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு உலக சுகாதார அமைப்பிடம் மேற்படி நிறுவனங்கள் மனு செய்துள்ளன. சர்வதேச தடுப்பூசி பகிர்வு திட்டத்தின் கீழ் இந்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கும் எனவும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் நோவோவேக்ஸ் தடுப்பூசியை எடுத்துச் செல்வதும், சேமித்து வைப்பதும் எளிது என்பதால், ஏழை நாடுகளுக்கு அதிக டோஸ்கள் கிடைப்பதில் இந்த தடுப்பூசி முக்கிய பங்காற்றும் என இந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படியுங்கள்...அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுடன் பிரதமர் மோடி சந்திப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X