என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓட்டலில் அனுமதி மறுப்பு: சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்
Byமாலை மலர்23 Sep 2021 1:59 AM GMT (Updated: 23 Sep 2021 1:59 AM GMT)
ஜெய்ர் போல்சனரோ சாலையோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக மந்திரிகள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
நியூயார்க் :
கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார்.
இந்தநிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. சபை பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தனது சக மந்திரிகளுடன் சேர்ந்து நியூயார்க் நகரில் உள்ள ஓட்டலுக்கு இரவு உணவு அருந்த சென்றார்.
ஆனால் அந்த ஓட்டலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே உணவு அருந்த முடியும் என்பதால் ஜெய்ர் போல்சனரோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, ஜெய்ர் போல்சனரோ தனது சக மந்திரிகளுடன் சேர்ந்து சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் ‘பீட்சா’ வாங்கி சாப்பிட்டார்.
கொரோனா வைரஸ் சாதாரண காய்ச்சல் போன்றதே என கூறிவரும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்துவது, தனிமைப்படுத்துதல் மற்றும் முககவசம் அணிவது போன்ற தற்காப்பு நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதே போல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அவர் மறுத்து வருகிறார்.
இந்தநிலையில் அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. சபை பொதுசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தனது சக மந்திரிகளுடன் சேர்ந்து நியூயார்க் நகரில் உள்ள ஓட்டலுக்கு இரவு உணவு அருந்த சென்றார்.
ஆனால் அந்த ஓட்டலில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மட்டுமே உணவு அருந்த முடியும் என்பதால் ஜெய்ர் போல்சனரோவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, ஜெய்ர் போல்சனரோ தனது சக மந்திரிகளுடன் சேர்ந்து சாலையோரம் உள்ள ஒரு உணவகத்தில் ‘பீட்சா’ வாங்கி சாப்பிட்டார்.
ஜெய்ர் போல்சனரோ சாலையோரத்தில் நின்று பீட்சா சாப்பிடும் புகைப்படத்தை அவரது சக மந்திரிகள் டுவிட்டரில் பகிர்ந்தனர். அந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிக்கலாம்... ராகுல், பிரியங்கா அனுபவம் இல்லாதவர்கள்- அமரிந்தர் சிங் பரபரப்பு பேட்டி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X