என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செப்டம்பர் 24-ம் தேதி அதிபர் ஜோ பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி - வெள்ளை மாளிகை
Byமாலை மலர்20 Sep 2021 6:05 PM GMT (Updated: 21 Sep 2021 4:18 AM GMT)
குவாட் அமைப்பின் உச்சி மாநாடு அமெரிக்காவில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற உள்ளது.
வாஷிங்டன்:
இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் வரும் 24-ம் தேதி நடக்க உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி குவாட் மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செப்டம்பர் 22-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். 23-ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களைச் சந்திக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி வரும் 24-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார். அதன்பின், செப்டம்பர் 25-ம் தேதி ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்த உள்ளார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X