search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் அதிபர் மெக்ரான்
    X
    பிரான்ஸ் அதிபர் மெக்ரான்

    பிரான்சில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக் கொலை

    ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தலைவரான ஷராவி பற்றி தகவல் அளிப்போருக்கு 5 மில்லியன் டாலர் பரிசு தரப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.
    பாரீஸ்:

    சகாராவில் கடந்த 2015-ம் ஆண்டு ஐ.எஸ். அமைப்பை நிறுவிய ஷராவி மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

    அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

    இந்நிலையில், பிரான்ஸ் அதிரடிப் படையினர் சகாராவில் நடத்திய அதிரடி தாக்குதலில் ஷராவி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மெக்ரான் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்  இது மிகப் பெரிய வெற்றி என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×