என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இலங்கை மந்திரி ராஜினாமா
Byமாலை மலர்16 Sep 2021 7:08 AM GMT (Updated: 16 Sep 2021 7:08 AM GMT)
இலங்கை ஜெயிலில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் நீண்ட காலமாக உரிய விசாரணை இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு:
இலங்கையில் சிறைச்சாலை துறை அமைச்சராக லொகான் ரத்வத்த இருந்து வந்தார். இவர் அனுராதாபுரம் ஜெயிலை ஆய்வு செய்ய சென்றார். அப்போது தனது ஆதரவாளர் சிலரையும் அவர் அழைத்து சென்றார்.
இந்த ஜெயிலில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக உரிய விசாரணை இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளனர்.
லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகள் அறைக்கு சென்று அவர்களை மிரட்டினார். தனது சொந்த துப்பாக்கியை எடுத்துக்காட்டி கொன்று விடுவதாக எச்சரித்தார். மேலும் அவர்களை முழங்காலிட செய்து அவமதித்தார்.
இந்த சம்பவம் குறித்து இலங்கை தமிழ் தலைவர்கள் டுவிட்டரில் தகவலை வெளியிட்டனர். மேலும் அவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் லொகான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தற்போது இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த அவர் மந்திரி லொகான் ரத்வத்தேவை தொடர்புகொண்டு பதவி விலகும்படி கூறியதாக தெரிய வந்துள்ளது.
இலங்கையில் சிறைச்சாலை துறை அமைச்சராக லொகான் ரத்வத்த இருந்து வந்தார். இவர் அனுராதாபுரம் ஜெயிலை ஆய்வு செய்ய சென்றார். அப்போது தனது ஆதரவாளர் சிலரையும் அவர் அழைத்து சென்றார்.
இந்த ஜெயிலில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் நீண்ட காலமாக உரிய விசாரணை இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளனர்.
லொகான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகள் அறைக்கு சென்று அவர்களை மிரட்டினார். தனது சொந்த துப்பாக்கியை எடுத்துக்காட்டி கொன்று விடுவதாக எச்சரித்தார். மேலும் அவர்களை முழங்காலிட செய்து அவமதித்தார்.
இந்த சம்பவம் குறித்து இலங்கை தமிழ் தலைவர்கள் டுவிட்டரில் தகவலை வெளியிட்டனர். மேலும் அவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் லொகான் ரத்வத்த ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தற்போது இத்தாலியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த அவர் மந்திரி லொகான் ரத்வத்தேவை தொடர்புகொண்டு பதவி விலகும்படி கூறியதாக தெரிய வந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X