என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடந்த 3 நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 250 வெளிநாட்டினர் வெளியேறினர்
Byமாலை மலர்11 Sep 2021 9:09 AM GMT (Updated: 11 Sep 2021 9:09 AM GMT)
ஆப்கானிஸ்தானில் இருந்து 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வெளியேறி உள்ளனர் என்று வாஷிங்டனின் சிறப்பு தூதரும், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவருமான சல்மய் கலீல்சாத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் மற்றும் வெளியேற விரும்பும் மக்களை வெளியேற்றும் பணியை கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி வரை அமெரிக்க படைகள் செய்தனர். அதன் பின் அமெரிக்க ராணுவமும் முழுமையாக வெளியேறியது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் உள்ள எஞ்சிய அமெரிக்க நாட்டவர்கள் உள்பட வெளிநாட்டினரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அவர் கூறும் போது, ‘கத்தார் நாடு தனது விமான சேவையை ஆப்கானிஸ்தானில் தொடங்கி உள்ளது. இதில் தலிபான்களின் ஒத்துழைப்பு முக்கியமான முயற்சி ஆகும். அமெரிக்கர்கள், வெளிநாட்டினர், நாட்டில் இருந்து வெளியேற விரும்பும் ஆப்கான் மக்கள் ஆகியோரை வெளியேற்றுவதற்கான பாதுகாப்பான வழியை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்’ என்றார்.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் வெளியேறி உள்ளனர் என்று வாஷிங்டனின் சிறப்பு தூதரும், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துபவருமான சல்மய் கலீல்சாத் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X