என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து பெண்கள் பேரணி
Byமாலை மலர்9 Sep 2021 2:15 AM GMT (Updated: 9 Sep 2021 2:15 AM GMT)
தலிபான்கள் அறிவித்துள்ள புதிய இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பெண்கள் பேரணி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காபூல் :
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுடன் கடந்த 20 ஆண்டுகளாக சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் நாட்டை முழுமையாக கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் நேற்று முன்தினம் அறிவித்தனர்.
தலிபான்களின் இந்த புதிய அரசில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதன் மூலம் கடந்த கால தலிபான் ஆட்சியில் இருந்தது போலவே இந்த முறையும் பெண்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தலிபான்கள் அறிவித்துள்ள புதிய இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பெண்கள் பேரணி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான்களின் கொடிகளை கைகளில் ஏந்தி பேரணியாக சென்ற பெண்கள் தலிபான்களே தங்களின் ஒரே நம்பிக்கை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுடன் கடந்த 20 ஆண்டுகளாக சண்டையிட்டு வந்த தலிபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் நாட்டை முழுமையாக கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசை தலிபான்கள் நேற்று முன்தினம் அறிவித்தனர்.
தலிபான்களின் இந்த புதிய அரசில் பெண்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதன் மூலம் கடந்த கால தலிபான் ஆட்சியில் இருந்தது போலவே இந்த முறையும் பெண்களுக்கு பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தலிபான்கள் அறிவித்துள்ள புதிய இடைக்கால அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பெண்கள் பேரணி நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தலிபான்களின் கொடிகளை கைகளில் ஏந்தி பேரணியாக சென்ற பெண்கள் தலிபான்களே தங்களின் ஒரே நம்பிக்கை என கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X