என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியாவில் ஜெயிலில் தீப்பிடித்து 41 கைதிகள் பலி
Byமாலை மலர்8 Sep 2021 9:04 AM GMT (Updated: 8 Sep 2021 9:04 AM GMT)
இந்தோனேசியா நாட்டில் அனைத்து ஜெயில்களிலுமே இட வசதியைவிட அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம்.
ஜகர்தா:
இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா அருகே டான்கராங் என்ற இடத்தில் மத்திய ஜெயில் உள்ளது.
இங்கு 1,225 பேரை அடைக்கக் கூடிய வசதிகள் உள்ளன. இந்தோனேசியா நாட்டில் அனைத்து ஜெயில்களிலுமே இட வசதியைவிட அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம். அதேபோல இந்த ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து குற்றவாளிகள் ஆவர்.
அங்குள்ள ‘சி’ பிளாக்கில் 122 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் போதை மருந்து வழக்கில் கைதானவர்கள் ஆவர்.
அங்குள்ள ஒரு அறையில் திடீரென தீப்பிடித்தது. அது மற்ற இடங்களுக்கும் பரவியது. இதில் கைதிகள் சிக்கிக் கொண்டனர். ஜெயில் அறைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் தப்பி செல்ல முடியவில்லை. தீயில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 39 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிபத்து சம்பவத்தால் அங்கிருந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை அடக்குவதற்காக கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன.
இந்தோனேசியா தலைநகரம் ஜகர்தா அருகே டான்கராங் என்ற இடத்தில் மத்திய ஜெயில் உள்ளது.
இங்கு 1,225 பேரை அடைக்கக் கூடிய வசதிகள் உள்ளன. இந்தோனேசியா நாட்டில் அனைத்து ஜெயில்களிலுமே இட வசதியைவிட அதிக எண்ணிக்கையில் கைதிகளை அடைத்து வைப்பது வழக்கம். அதேபோல இந்த ஜெயிலில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் போதை மருந்து குற்றவாளிகள் ஆவர்.
அங்குள்ள ‘சி’ பிளாக்கில் 122 கைதிகள் அடைக்கப்பட்டு இருந்தனர். அனைவரும் போதை மருந்து வழக்கில் கைதானவர்கள் ஆவர்.
அங்குள்ள ஒரு அறையில் திடீரென தீப்பிடித்தது. அது மற்ற இடங்களுக்கும் பரவியது. இதில் கைதிகள் சிக்கிக் கொண்டனர். ஜெயில் அறைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்களால் தப்பி செல்ல முடியவில்லை. தீயில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 39 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. தீவிபத்து சம்பவத்தால் அங்கிருந்த கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை அடக்குவதற்காக கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X