search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா சோதனை
    X
    கொரோனா சோதனை

    ஈரானை விடாத கொரோனா - ஒரே நாளில் 583 பேர் உயிரிழப்பு

    ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர்.
    டெஹ்ரான்:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
     
    உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 9-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் ஒரே நாளில் 27,579 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 51.56 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 583 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.11 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
     
    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தை நெருங்குகிறது. 6.51 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×