என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருந்து குப்பிக்குள் துகள்கள்: அமெரிக்க தடுப்பூசியை செலுத்தும் பணியை அதிரடியாக நிறுத்தியது ஜப்பான்
Byமாலை மலர்2 Sep 2021 5:27 AM GMT (Updated: 2 Sep 2021 6:13 AM GMT)
ஜப்பானில் அமெரிக்காவின் மற்றொரு தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த மே மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
டோக்கியோ:
கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளைபோல ஜப்பானிலும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்திய பிறகு அங்கு பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
ஜப்பான் இதுவரை கொரோனா தடுப்பூசி மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பூசி போடுவதையும் ஊக்கப்படுத்தாமல் இருந்தது.
பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து வெளிநாட்டு தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது.
இவற்றை பொதுமக்களுக்கு போடும் பணி தொடர்ந்து நடந்து வந்தது. அதில் ஒரு மருந்து பாட்டிலுக்குள் கருப்பு துகள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 5 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசி மருந்தை நிறுத்தி வைத்து உள்ளது. ஏற்கனவே இந்த மருந்தில் கலப்படம் இருப்பதாக புகார்கள் வந்தன. அதுபற்றி ஆய்வு நடத்தப்படுகிறது.
ஆனால் மாடர்னா தடுப்பூசி போட்ட யாருக்கும் இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்த கருப்பு துகள்கள் எப்படி வந்தன? என்பது தெரியவில்லை. அமெரிக்கா இந்த மருந்தை உற்பத்தி செய்தாலும் ஸ்பெயினில் உள்ள ஒரு நிறுவனம்தான் மருந்தை பாட்டிலில் அடைத்து சப்ளை செய்யும் பணியை செய்கிறது.
கொரோனா பாதிப்பு மற்ற நாடுகளைபோல ஜப்பானிலும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் ஒலிம்பிக் போட்டி நடத்திய பிறகு அங்கு பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது.
ஜப்பான் இதுவரை கொரோனா தடுப்பூசி மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. தடுப்பூசி போடுவதையும் ஊக்கப்படுத்தாமல் இருந்தது.
பாதிப்பு அதிகரிப்பதை தொடர்ந்து வெளிநாட்டு தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் பைசர், இங்கிலாந்தின் அஸ்ட்ரா ஜெனெகா ஆகிய மருந்துகளை பயன்படுத்த ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தன. அமெரிக்காவின் மற்றொரு தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த மே மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து 5 லட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசி மருந்தை நிறுத்தி வைத்து உள்ளது. ஏற்கனவே இந்த மருந்தில் கலப்படம் இருப்பதாக புகார்கள் வந்தன. அதுபற்றி ஆய்வு நடத்தப்படுகிறது.
ஆனால் மாடர்னா தடுப்பூசி போட்ட யாருக்கும் இதுவரை எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இந்த கருப்பு துகள்கள் எப்படி வந்தன? என்பது தெரியவில்லை. அமெரிக்கா இந்த மருந்தை உற்பத்தி செய்தாலும் ஸ்பெயினில் உள்ள ஒரு நிறுவனம்தான் மருந்தை பாட்டிலில் அடைத்து சப்ளை செய்யும் பணியை செய்கிறது.
ஒருவேளை அங்கு நடந்த தவறால் மருந்தில் கருப்பு துகள்கள் கலந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அதுபற்றி சோதனை நடந்து வருகிறது.
இதையும் படியுங்கள்... மூட்டை, முடிச்சுகளுடன் கால்நடைகள் போல நடந்து செல்லும் ஆப்கானிஸ்தான் அகதிகள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X