search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீப்பற்றிய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை
    X
    தீப்பற்றிய தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் புகை

    கராச்சி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 16 தொழிலாளர்கள் பலி

    தொழிற்சாலையை விட்டு வெளியேறுவதற்கு எந்த அவசர வழியும் இல்லாததால் யாரும் வெளியேற வாய்ப்பு இல்லை காவல்துறை அதிகாரி ஷாஜகான் கான் தெரிவித்தார்.
    கராச்சி:

    பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    தீயில் கருகி இறந்த 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டிடத்தை விட்டு வெளியேறுவதற்கு எந்த அவசர வழியும் இல்லாததால் யாரும் வெளியேற வாய்ப்பு இல்லை காவல்துறை அதிகாரி ஷாஜகான் கான் தெரிவித்தார்.

    மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுக்கான பாதை அடைக்கப்பட்டிருந்ததாகவும், திறந்திருந்தால் தொழிலாளர்கள் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று உயிர்தப்பியிருப்பார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
    Next Story
    ×