என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கராச்சி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 16 தொழிலாளர்கள் பலி
Byமாலை மலர்27 Aug 2021 2:17 PM GMT (Updated: 27 Aug 2021 2:17 PM GMT)
தொழிற்சாலையை விட்டு வெளியேறுவதற்கு எந்த அவசர வழியும் இல்லாததால் யாரும் வெளியேற வாய்ப்பு இல்லை காவல்துறை அதிகாரி ஷாஜகான் கான் தெரிவித்தார்.
கராச்சி:
பாகிஸ்தானின் வர்த்தக தலைநகரான கராச்சியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்துகொண்டிருந்த 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தீயில் கருகி இறந்த 16 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கட்டிடத்தை விட்டு வெளியேறுவதற்கு எந்த அவசர வழியும் இல்லாததால் யாரும் வெளியேற வாய்ப்பு இல்லை காவல்துறை அதிகாரி ஷாஜகான் கான் தெரிவித்தார்.
மேல் தளத்திற்கு செல்லும் படிக்கட்டுக்கான பாதை அடைக்கப்பட்டிருந்ததாகவும், திறந்திருந்தால் தொழிலாளர்கள் மொட்டை மாடிக்கு ஓடிச் சென்று உயிர்தப்பியிருப்பார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X