என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் 6000 அமெரிக்க வீரர்கள் காவல்
Byமாலை மலர்16 Aug 2021 5:50 AM GMT (Updated: 16 Aug 2021 7:02 AM GMT)
ஆப்கானிஸ்தானில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ராணுவ பாதுகாப்புடன் பொதுமக்கள் அந்நாட்டில் இருந்து வெளியேற தொடங்கி உள்ளனர்.
காபூல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தலைநகரம் காபூலில் என்ன நடக்குமோ? என்ற பதட்டம் நிலவுகிறது.
தற்போது பெரும்பாலான பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அமெரிக்க படையினர் காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். அங்கிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
இது சம்பந்தமாக அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்தியில், “காபூல் விமான நிலையம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அங்கிருந்து வெளியேறுபவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்து வருகிறோம்.
அமெரிக்க வீரர்கள் நாளை முதல் காபூலில் இருந்து வெளியேற தொடங்குவார்கள். ஏற்கனவே காபூலில் இருந்து 2 ஆயிரம் பொதுமக்கள் அமெரிக்கா திரும்பி இருக்கிறார்கள். அமெரிக்க சிறப்பு விசா வைத்திருப்பவர்கள் இதுபோன்று அனுமதிக்கப்படுவார்கள்.
ஆப்கானிஸ்தானில் எந்தவித ரத்த மோதல்களும் இல்லாமல் அமைதியுடன் எல்லா நடவடிக்கைகளும் இருப்பதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகள் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கையை விடுத்துள்ளன. புதிய ஆட்சி நாட்டில் பிரச்சினைகளுக்கு இடம் அளிக்காமல் அதிகாரத்தை செலுத்த வேண்டும், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்படக்கூடாது. நாட்டை விட்டு வெளியேற விரும்புபவர்களை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும். எந்தவித தாக்குதல்களும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில் தலைநகரம் காபூலில் என்ன நடக்குமோ? என்ற பதட்டம் நிலவுகிறது.
தற்போது பெரும்பாலான பகுதிகள் தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் அமெரிக்க படையினர் காபூல் விமான நிலையத்தை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார்கள். அங்கிருந்து விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன.
விமான நிலையத்தில் மட்டும் அமெரிக்காவை சேர்ந்த 6 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். அவர்கள் விமான போக்குவரத்துகளையும் கவனித்து வருகிறார்கள்.
இது சம்பந்தமாக அமெரிக்கா வெளியிட்டுள்ள செய்தியில், “காபூல் விமான நிலையம் முழுவதும் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அங்கிருந்து வெளியேறுபவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்து வருகிறோம்.
அமெரிக்க வீரர்கள் நாளை முதல் காபூலில் இருந்து வெளியேற தொடங்குவார்கள். ஏற்கனவே காபூலில் இருந்து 2 ஆயிரம் பொதுமக்கள் அமெரிக்கா திரும்பி இருக்கிறார்கள். அமெரிக்க சிறப்பு விசா வைத்திருப்பவர்கள் இதுபோன்று அனுமதிக்கப்படுவார்கள்.
ஆப்கானிஸ்தானில் எந்தவித ரத்த மோதல்களும் இல்லாமல் அமைதியுடன் எல்லா நடவடிக்கைகளும் இருப்பதற்கு நாங்கள் முயற்சித்து வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே அமெரிக்கா உள்ளிட்ட 60 நாடுகள் ஒன்றிணைந்து ஒரு கோரிக்கையை விடுத்துள்ளன. புதிய ஆட்சி நாட்டில் பிரச்சினைகளுக்கு இடம் அளிக்காமல் அதிகாரத்தை செலுத்த வேண்டும், மீண்டும் உள்நாட்டுப்போர் ஏற்படக்கூடாது. நாட்டை விட்டு வெளியேற விரும்புபவர்களை தடுக்காமல் அனுமதிக்க வேண்டும். எந்தவித தாக்குதல்களும் நடத்தக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே காபூலில் இருந்து அமெரிக்க தூதரகம் முற்றிலும் மூடப்பட்டு அமெரிக்க கொடி இறக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்...ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X