என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லிபியா - படகு கவிழ்ந்த விபத்தில் 57 அகதிகள் உயிரிழப்பு
Byமாலை மலர்27 July 2021 11:16 PM GMT (Updated: 27 July 2021 11:16 PM GMT)
லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சென்ற அகதிகளின் படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 57 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
திரிபோலி:
வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டுப் போரால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அடைக்கலம் தேடி கடல் வழியே ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்வது அதிகரித்து உள்ளது.
அவர்கள் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகள் வாயிலாக புலம் பெயர்கின்றனர். இந்த பயணத்தில் பல காரணங்களால் அடிக்கடி கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்படுகிறது.
இந்நிலையில், லிபியாவின் மேற்கு கடலோர நகரமான கும்சி நகரில் இருந்து சமீபத்தில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 75 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. அந்தப் படகு நடுக்கடலில் திடீரென கவிழ்ந்தது.
இதனை அடுத்து, உயிர் பிழைத்தவர்கள் அளித்த தகவலின்படி நீரில் மூழ்கியவர்களில் 2 குழந்தைகள் மற்றும் 20 பெண்கள் என 57 பேர் உயிரிழந்தனர். கடலில் தத்தளித்த 18 பேரை மீனவர்களும் மற்றும் கடலோர காவல் படையினரும் அதிக போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X