search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    துருக்கியில் 56 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

    துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை நெருங்குகிறது.
    அங்காரா:

    கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.
      
    உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் துருக்கி தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,809 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 56 லட்சத்தைக் கடந்துள்ளது.
     
    ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்து 997 ஆக உயர்ந்துள்ளது.
     
    மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 54.26 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 1.40 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Next Story
    ×