என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலை
Byமாலை மலர்23 July 2021 12:25 AM GMT (Updated: 23 July 2021 8:18 AM GMT)
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரின் ஆதரவாளா்கள் நடத்திய வன்முறை போராட்டத்தில் பலா் உயிரிழந்து உள்ளனா்.
டர்பன்:
தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.
ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக அதிபா் பதவி வகிக்கும் சிறில் ராமபோசா தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஜேக்கப் ஜூமா கடந்த 2018-ம் ஆண்டு ராஜினாமா செய்துள்ளார்.
ஜூமாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவா் நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29-ம் தேதி 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதனை தொடா்ந்து, கடந்த 7-ம் தேதி ஜூமா போலீசாரிடம் சரணடைந்துள்ளார்.
இந்நிலையில், ஜூமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அவரது சகோதரா் மைக்கேல் ஜூமாவின் இறுதிச்சடங்கில் பங்கேற்க கருணை அடிப்படையில் அவருக்கு இந்த ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X