search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    இந்தோனேசியாவை விடாத கொரோனா - 30 லட்சத்தைத் தாண்டியது பாதிப்பு

    இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 1,449 பேர் உயிரிழந்துள்ளனர்.
    ஜகார்த்தா:

    தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் பட்டியலில் இந்தோனேசியா 14-வது இடத்தில் உள்ளது.
     
    இந்நிலையில், இந்தோனேசியாவில் நேற்று ஒரே நாளில் 49,509 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
     
    இதன்மூலம் அங்கு கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 1,449 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த உயிரிழப்பு 79 ஆயிரத்தைத் தாண்டியது.
     
    கொரோனாவில் இருந்து 23.92 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும், 5.61 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×