search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் போரிஸ் ஜான்சன்
    X
    பிரதமர் போரிஸ் ஜான்சன்

    சுகாதாரத்துறை மந்திரிக்கு கொரோனா - தனிமைப்படுத்திக் கொண்டார் இங்கிலாந்து பிரதமர்

    இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் கொரோனா உறுதியானதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையதுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    சஜித் ஜாவித் கொரோனா தடுப்பூசிகளின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார்.

    சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித்

    இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன் இல்லத்திற்கு ஜாவித் சென்றதாக கூறப்படுகிறது. எனினும், பிரதமர் போரிஸ் ஜான்சனை நேரடியாக ஜாவித் சந்தித்தாரா என்பது பற்றி அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

    இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 26-ம் தேதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×