search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு
    X
    ஊரடங்கு

    அதிகரிக்கும் கொரோனா - வங்காளதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

    கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
    டாக்கா:

    அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1-ம் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது.

    இதற்கிடையே, அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 11 ஆயிரத்து 525 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒரே நாளில் 163 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.

    கொரோனா வைரஸ்

    இதுவரை இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசை கொண்டு சென்றது. 

    இந்நிலையில், நாளையுடன் முடிவடைய இருந்த நாடு தழுவிய முழு ஊரடங்கை வரும் 14-ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
    Next Story
    ×