என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிகரிக்கும் கொரோனா - வங்காளதேசத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு
Byமாலை மலர்6 July 2021 5:48 PM GMT (Updated: 6 July 2021 5:48 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் தொடர்ந்து ஊரடங்கை நீட்டித்து வருகின்றன.
டாக்கா:
அண்டை நாடான வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கு கடந்த 1-ம் தேதி நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு நாளையுடன் முடிவடைய உள்ளது.
இதற்கிடையே, அங்கு கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 11 ஆயிரத்து 525 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. ஒரே நாளில் 163 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள்.
இதுவரை இல்லாத வகையில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு புதிய உச்சத்தை எட்டியது முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய கட்டாயத்துக்கு அரசை கொண்டு சென்றது.
இந்நிலையில், நாளையுடன் முடிவடைய இருந்த நாடு தழுவிய முழு ஊரடங்கை வரும் 14-ம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X