என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்கா
Byமாலை மலர்21 Jun 2021 7:18 PM GMT (Updated: 21 Jun 2021 7:18 PM GMT)
அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அமெரிக்கா கூறி வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா ரஷியா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ரஷிய அதிபர் புதினை முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது அவர் அலெக்சி நவால்னி விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார். ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை இணக்கமாக நடைபெற்றதாக புதின் தெரிவித்தார்.இந்த நிலையில் அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுபற்றி அவர் கூறுகையில் ‘‘அலெக்சி நவால்னி வழக்கில் ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளின் மற்றொரு தொகுப்பை நாங்கள் தயார் செய்து வருகிறோம். நாங்கள் சரியான இலக்குகளை பெற தொகுப்புகளை உருவாக்கியுள்ளோம் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதார தடை அறிவிப்பு வெளியாகும். அதைசெய்யும்போது ரசாயன ஆயுதங்கள் தொடர்பாகவும் மேலும் பொருளாதார தடைகளை விதிப்போம்’’ என கூறினார்.
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அமெரிக்கா கூறி வருகிறது.
மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா ரஷியா மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இந்த சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனீவாவில் ரஷிய அதிபர் புதினை முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது அவர் அலெக்சி நவால்னி விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார். ஆனாலும் இந்த பேச்சுவார்த்தை இணக்கமாக நடைபெற்றதாக புதின் தெரிவித்தார்.இந்த நிலையில் அலெக்சி நவால்னி விவகாரத்தில் ரஷியா மீது புதிய பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X