search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனாவால் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் ஊழியர்கள்
    X
    கொரோனாவால் இறந்தவர் உடலை சுமந்து செல்லும் ஊழியர்கள்

    பிரேசிலை உலுக்கும் கொரோனா - பலி எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியது

    பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.78 கோடியைக் கடந்துள்ளது.
    ரியோ டி ஜெனிரோ:

    உலக அளவில் கொரோனா- வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரேசில் மூன்றாம் இடத்தில் நீடிக்கிறது 

    பிரேசிலில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா-வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 78 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

     
    அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 2,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்துள்ளது.

    கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.61 கோடியைக் கடந்துள்ளது. தொற்று பாதிப்புடன் 11.99 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
    Next Story
    ×