என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அமெரிக்கா எச்.1பி விசா நடைமுறையில் மீண்டும் சலுகை- இந்தியர்கள் அதிகம் பேர் பயன் அடைவார்கள்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வெளி நாட்டினர் தங்கி பணி புரிய எச்-1பி விசாவழங்கப்படுகிறது. இதில் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியாற்றி வருகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் எச்.1பி விசாவுக்காக ஏராளமானோர் விண்ணப்பத்து வருகிறார்கள். ஆனால் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தனது ஆட்சி காலத்தில் எச்-1பி விசா வழங்குவதற்கான நடைமுறையில் கட்டுபாடுகளை கொண்டு வந்தார்.
வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தார். இதற்கிடையே புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் முன்னாள் அதிபர் டிரம்ப் விதித்த பல்வேறு உத்தரவுகளை ரத்து செய்து வருகிறார். எச்-1பி விசா மீதான கட்டுப்பாடுகளையும் விலக்கினார்.
டிரம்ப் ஆட்சி காலத்தில் எச்.1பி விசா விண்ணப்பங்களை முற்றிலுமாக நிராகரிப்பதற்கான அனுமதி குடியேற்ற அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த கொள்கை முடிவை திரும்ப பெறுவதாக அமெரிக்க குடியேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி இனி எச்-1பி விசா விண்ணப்பம் நிராகரிப்பதற்கு முன்பாக என்ன காரணத்திற்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது என்பது குறித்து விண்ணப்பதாரர்களுக்கு நோட்டீஸ் மூலம் தெரியப்படுத்தப்படும்.
இதன்மூலம் விண்ணப்பித்தில் ஏதாவது தவறு இருந்தால் அதனை சரி செய்து கொள்ள முடியும். புதுப்பிக்கப்பட்ட இந்த கொள்கை மூலம் விண்ணப்பதாரர்களிடம் இருந்து கூடுதல் தகவல் தேவை என குடியேற்ற அதிகாரி முடிவு செய்யும்போது ஆதாரங்கள் தேவை என்றும் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கான காரணத்தை கூறியும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவதை உறுதி செய்யும். இதனால் விண்ணப்பத்தில் அறியாமல் செய்த தவறு தற்செயலான குறைபாடுகள் சரி செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும்.
இது குறித்து அமெரிக்க குடியேற்ற சேவை நிறுவன இயக்குனர் டிரேசி ரெனால்டு கூறும்போது, அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக குடியேறுவதில் தேவையற்ற தடைகளை நீக்கவும், குடியேற்ற பயனாளிகளின் சுமையை குறைக்கவும் அதிபர் ஜோ பைடன் - துணை அதிபர் கமலா ஹாரீஸ் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருகிறது. அதன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
எச்-1பி விசா விண்ணப்ப நடைமுறையில் மீண்டும் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால் அதனை அதிகளவில் விண்ணப்பிக்கும் இந்தியர்கள் பயன்பெறுவார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்