search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கொலம்பியாவில் 36 லட்சத்தைத் தாண்டியது கொரோனா பாதிப்பு

    கொலம்பியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை நெருங்குகிறது.
    கொலம்பியா:

    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா-வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெருமளவில் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
      
    கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் கொலம்பியா 12-வது இடத்தில் உள்ளது

    இந்நிலையில், கொலம்பியாவில் ஒரே நாளில் 18,586 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இதனால் அங்கு கொரோனா-வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 36 லட்சத்தைக் கடந்துள்ளது.


    ஒரே நாளில் 427 பேர் பலியானதால் அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 92 ஆயிரத்து 923 ஆக உள்ளது.

    கொரோனா தொற்றில் இருந்து 33.65 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். மேலும் 1.53 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×