என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
இந்தியா தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி
ரியோடி ஜெனிரோ:
கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை இந்தியாவில் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது.
கோவேக்சின் என்ற அந்த தடுப்பூசி இந்தியாவில் பொதுமக்களுக்கு செலுப்பட்டு வருகிறது. தடுப்பூசிகளை தயாரித்து வெளிநாடுகளுக்கு இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி கோவேக்சின் தடுப்பூசியை பிரேசில் நாட்டில் இறக்குமதி செய்ய அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால் ஆய்வு விவரங்கள் உள்ளிட்ட சில காரணங்களை கூறி பிரேசில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார ஒழுங்குமுறை அமைப்பான அன்விசா நிராகரித்து இருந்தது.
இந்த நிலையில் கோவேக்சின் தடுப்பூசிகளை பிரேசிலில் இறக்குமதி செய்வதற்கு அன்விசா அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு சோதனை முடிவுகளை சமர்ப்பித்த பின்னர் தற்போது பிரேசில் ஒப்புதல் வழங்கி உள்ளது. அதேபோல் ரசியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கும் பிரேசில் அனுமதி வழங்கி உள்ளது.
இது குறித்து பிரேசில் சுகாதார நிறுவன மையம் கூறும்போது, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசிக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 4 லட்சம் தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளது என்றார். பிரேசில் மக்கள் தொகையில் இதுவரை 21 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்