என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் செல்லப்பிராணிகளை காப்பாற்ற கரடியை கையாலேயே அடித்து விரட்டிய வீரமங்கை
Byமாலை மலர்2 Jun 2021 8:47 PM GMT (Updated: 3 Jun 2021 6:50 AM GMT)
அமெரிக்காவில் ஹேலி மோரினிகோ என்கிற பெண் தனது செல்லப்பிராணிகளை காப்பாற்ற கையாலேயே கரடியை அடித்து விரட்டிய சம்பவம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நியூயார்க்:
அமெரிக்காவின் உட்டா மாகாணம் வயோமிங் நகரை சேர்ந்த சிட்லாலி மோரினிகோ என்கிற பெண் அங்குள்ள எல்லோஸ்டன் தேசிய பூங்கா அருகே வீட்டை கட்டி வசித்து வருகிறார். இந்தநிலையில் அண்மையில் இந்த பூங்காவில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று தனது குட்டிகளுடன் சிட்லாலி மோரினிகோ வீட்டின் பின்புறத்தில் உள்ள சுற்று சுவரில் ஏறியது.
அப்போது சிட்லாலி மோரினிகோவின் 17 வயது மகளான ஹேலி மோரினிகோ செல்லப்பிராணிகளாக வளர்த்து வரும் 3 நாய்கள் கரடியை விரட்ட முயன்றன. இதனால் கரடி குட்டிகள் பயந்து ஓட, தாய் கரடி நாய்களை தாக்க முயன்றது. இதனிடையே நாய்களின் சத்தம் கேட்டு ஹேலி மோரினிகோ வீட்டின் பின்புறம் வந்தார். அப்போது கரடி தனது செல்லப்பிராணிகளை தாக்க முயல்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சற்றும் யோசிக்காமல் ஓடிச் சென்று கையாலேயே கரடியை ஓங்கி அடித்து சுற்று சுவரிலிருந்து தள்ளிவிட்டார். இதனால் அதிர்ந்து போன கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இந்த காட்சிகள் அனைத்தும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து ஹேலி மோரினிகோ கூறுகையில் ‘‘உண்மையில் அதை நான் அடித்து சுவரில் இருந்து தள்ளி விடும் வரை அது கரடி என்பதே எனக்கு தெரியாது. ஏதோ ஒரு மிருகம் என் குழந்தைகளை (நாய்கள்) தூக்கி செல்ல போகிறது என்ற பதற்றத்தில் அதை அடித்து தள்ளிவிட்டேன்’’ என கூறினார்.
அமெரிக்காவின் உட்டா மாகாணம் வயோமிங் நகரை சேர்ந்த சிட்லாலி மோரினிகோ என்கிற பெண் அங்குள்ள எல்லோஸ்டன் தேசிய பூங்கா அருகே வீட்டை கட்டி வசித்து வருகிறார். இந்தநிலையில் அண்மையில் இந்த பூங்காவில் இருந்து வெளியேறிய கரடி ஒன்று தனது குட்டிகளுடன் சிட்லாலி மோரினிகோ வீட்டின் பின்புறத்தில் உள்ள சுற்று சுவரில் ஏறியது.
இதுகுறித்து ஹேலி மோரினிகோ கூறுகையில் ‘‘உண்மையில் அதை நான் அடித்து சுவரில் இருந்து தள்ளி விடும் வரை அது கரடி என்பதே எனக்கு தெரியாது. ஏதோ ஒரு மிருகம் என் குழந்தைகளை (நாய்கள்) தூக்கி செல்ல போகிறது என்ற பதற்றத்தில் அதை அடித்து தள்ளிவிட்டேன்’’ என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X