search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக சுகாதார நிறுவனம்
    X
    உலக சுகாதார நிறுவனம்

    "கவலை அளிக்கும் டெல்டா ரக வைரஸ்" - உலக சுகாதார நிறுவனம் தகவல்

    இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டும் கவலையளிக்கும் வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.
    ஜெனீவா:

    கடந்த ஆண்டு 2020 அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் பி.1.617 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுதல் முதன் முறையாக கண்டறியப்பட்டது. பின்னர் மூன்ற உப ரகங்களாக இது பிரிந்தது. இவற்றில் பி.1.617.2  என்ற ரகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் டெல்டா என்று பெயர் சூட்டியது. பி.1.617.1 ரகத்திற்கு கப்பா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ்


    உலக சுகாதார நிறுவனம், டெல்டா ரக வைரஸ், இந்தியா, கொரோனா பரவல் உருமாறிய கொரோனா வைரஸின் மூன்ற உப ரகங்களையும் கவலையளிக்கும் ரகம் என்று கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருந்தது. செவ்வாயன்று, இந்த மூன்று உப ரகங்களில், டெல்டா ரகம் மட்டுமே கவலையளிக்கும் ரகம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பரவல் வேகம் மிக அதிகமாக உள்ளதால் இதை கவலையளிக்கும் ரகமாக வகைப்படுத்தியுள்ளது.

    கப்பா உப ரக வைரஸின் பரவல் மிகக் குறைவாக உள்ளதால் அதனை கவனிக்கப்பட வேண்டிய ரகமாக உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது.பி.1617.3 என்ற பெயரிடப்படாத மூன்றாவது உப ரக வைரஸ் மிக மிக குறைவாகவே கண்டறியப்பட்டுள்ளதால், அது எந்த பிரிவிலும் சேர்க்கப்படவில்லை.பல நாடுகளுக்கு பரவியுள்ள இந்த டெல்டா ரக வைரஸ் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
    Next Story
    ×