search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு
    X
    ஊரடங்கு

    கொரோனா பரவல் எதிரொலி - மலேசியாவில் ஜூன் 1 முதல் முழு ஊரடங்கு

    கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மலேசியாவில் இதுவரை 5 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
    கோலாலம்பூர்:

    மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,020 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98 பேர் பலியாகி உள்ளனர்.

    மலேசியாவில் இதுவரை 5,58,534 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மலேசிய நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    மலேசியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நாட்டில் ஜூன் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலாக்கப்படவுள்ளது.

    இந்த ஊரடங்கு ஜூன் 1-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை நீடிக்கும். அத்தியாவசியப் பொருட்களுக்கான கடைகள் திறந்தே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×