என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதா சட்டம் அமல் - ஜோ பைடன்
Byமாலை மலர்22 May 2021 6:08 PM GMT (Updated: 22 May 2021 6:08 PM GMT)
ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டதை அடுத்து அந்த மசோதா சட்டம் அமலுக்கு வந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதத்தில் அட்லாண்டா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 6 பெண்கள் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன.
இந்நிலையில், ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் வகையில் ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். அதன்பின் அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
இந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டுள்ளதன் மூலம், அமெரிக்கா முழுவதும் வெறுப்பு குற்றங்களைப் பதிவுசெய்ய தனிப் பிரிவுகளும், உதவி தொலைபேசி எண்களும் தொடங்கப்படும். தாக்குதல் சம்பவங்களுக்கு உள்ளானவர்கள் தெரிவிக்கும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சட்டம் அமெரிக்கர்களின் மனதையும், மூளையையும் மாற்ற உதவும். அமெரிக்காவில் இன வெறுப்புணர்வுக்கு இடம் இல்லை. இதை எனது அடிமனதில் இருந்து தெரிவிக்கிறேன்' என்றார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு இரு கட்சிகளிடமிருந்தும் பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கடந்த மார்ச் மாதத்தில் அட்லாண்டா பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டனர். அந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் 6 பெண்கள் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து, ஆசிய அமெரிக்கர்கள் மீது வெறுப்புத் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்தன.
இந்நிலையில், ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் வகையில் ஆசிய அமெரிக்கர்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் மசோதாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டார். அதன்பின் அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
இந்த மசோதா சட்டம் ஆக்கப்பட்டுள்ளதன் மூலம், அமெரிக்கா முழுவதும் வெறுப்பு குற்றங்களைப் பதிவுசெய்ய தனிப் பிரிவுகளும், உதவி தொலைபேசி எண்களும் தொடங்கப்படும். தாக்குதல் சம்பவங்களுக்கு உள்ளானவர்கள் தெரிவிக்கும் புகார்கள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சட்டம் அமெரிக்கர்களின் மனதையும், மூளையையும் மாற்ற உதவும். அமெரிக்காவில் இன வெறுப்புணர்வுக்கு இடம் இல்லை. இதை எனது அடிமனதில் இருந்து தெரிவிக்கிறேன்' என்றார்.
அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு இரு கட்சிகளிடமிருந்தும் பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X