search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்
    X
    முக கவசம் அணிந்து செல்லும் மக்கள்

    ஈரானில் கொரோனா தாக்கத்துக்கு ஒரே நாளில் 351 பேர் உயிரிழப்பு

    ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 26.73 லட்சத்தைக் கடந்துள்ளது.
    டெஹ்ரான்:

    சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாததால் தினமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    சீனாவுக்கு வெளியே மற்ற நாடுகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
     
    உலக அளவில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் பட்டியலில் ஈரான் 14-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் ஈரான் நாட்டில் ஒரே நாளில் 351 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 75 ஆயிரத்து 261 ஆக உள்ளது.

    ஈரானில் மேலும் 18,408 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு பாதிப்புக்கு உள்ளானோர் எண்ணிக்கை 26.73 லட்சத்தைத் தாண்டியுள்ளது என ஈரான் அரசின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×