என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சர்வதேச எல்லைகள் எப்போது திறக்கப்படும் - ஆஸ்திரேலியா மந்திரி விளக்கம்
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸ் பரவியது. இதையடுத்து அங்கு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
மேலும் ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டது.
ஆனாலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி விடக்கூடாது என்பதில் அரசு மிகுந்த கவனமாக உள்ளது. இதனால் தனது நாட்டின் சர்வதேச எல்லையை முழுமையாக திறக்காமல் உள்ளது.
இந்தநிலையில் ஆஸ்திரேலியாவின் வர்த்தக மந்திரி டேன் தெஹான் அளித்த போது அவரிடம் விமான நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் சர்வதேச எல்லைகள் திறக்கப்படும் என்று எப்போது கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு டேன் தெஹான் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவில் சர்வதேச எல்லைகள் அடுத்த ஆண்டின் பாதிவரை முழுமையாக திறக்கப்படாமல் போகலாம். ஆஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையேயான பயணம் மீண்டும் திறக்கப்படலாம் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் நேற்று புதிதாக 21 பேர் மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்