என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புளோரிடா நோக்கி சென்ற சிறிய விமானம் விழுந்து நொறுங்கியது- 4 பேர் பலி
Byமாலை மலர்26 April 2021 4:12 AM GMT (Updated: 26 April 2021 4:12 AM GMT)
அமெரிக்காவில் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாநிலத்தில் இலகு ரக விமானம் விபத்துக்குள்ளானது. ஒற்றை எஞ்சின் கொண்ட பைபர் பிஏ-46 என்ற விமானம், வெள்ளிக்கிழமையன்று நான்கு பேருடன் ஓக்லஹோமாவின் விமான நிலையமான மஸ்கோகியில் இருந்து வடக்கு புளோரிடாவில் உள்ள வில்லிஸ்டன் நோக்கி புறப்பட்டது.
ஆனால் அன்று மாலை 5 மணியளவில், ஆர்கன்சாஸ் மாநிலம் லிட்டில் ராக் அருகே சென்றபோது ரேடார் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி நடைபெற்றது.
லிட்டில் ராக் அருகில் வசித்த மக்கள், விமானம் ஒன்று விழுந்த சத்தம் கேட்டதாக கூறினர். அப்பகுதியில் மீட்புக்குழுவினர் தேடும் பணியில் ஈடுபட்டபோது, விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானத்தில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X