என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
‘திருமதி இலங்கை’ பட்டம் வென்றவரை தாக்கியதாக திருமதி உலக அழகி பட்டம் வென்றவர் கைது
Byமாலை மலர்8 April 2021 3:21 PM GMT (Updated: 8 April 2021 3:21 PM GMT)
இலங்கையில் பட்டம் சூட்டியபோது திருமதி இலங்கை அழகியை முன்னாள் அழகி தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
2021-ம் ஆண்டுக்கான திருமணம் முடிந்த பெண்களுக்கான திருமதி இலங்கை அழகி போட்டியில் புஷ்பிகா டி சில்வா முதல் இடம் பிடித்தார். அவரருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் சில நிமிடம்கூட நீடிக்கவில்லை.
புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இப்பட்டத்தை பெற தகுதியில்லை என்று கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலினா ஜூரி பட்டத்தை பறித்தார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது. கலிபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் நடத்திய போட்டியில் கரோலினா ஜூரி திருமதி உலக அழகி பட்டத்தையும் வென்றவர்.
கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிந்ததையடுத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் திரும்ப வழங்கப்பட்டது.
இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. புகார் அடிப்படையில் திருமதி உலக அழகி பட்டம் வென்ற கரோலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
‘‘நாங்கள் ஜூரி மற்றும் அவது உதவியாளர் சுலா மனமேந்த்ரா ஆகியோரை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதம் படித்தியதாகவும், தாக்கியதாகவும் கைது செய்துள்ளோம்.’’ என்று மூத்த போலீஸ் அதிகாரி அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.
புஷ்பிகா டி சில்வா ‘‘நாங்கள் புகாரை திரும்பப் பெற தயாராக இருக்கிறோம். பொது இடத்தில் இடத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால் அவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். நீதிமன்றத்திற்க வெளியே இதை முடித்துக் கொள்ள நான் முயற்சி செய்தேன். அவர் மறுத்துவிட்டார். என்னால் மன்னிக்க முடியும். மறக்க முடியாது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X