என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி - ஜோ பைடன்
Byமாலை மலர்29 March 2021 11:39 PM GMT (Updated: 30 March 2021 5:16 PM GMT)
அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன், முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அறிவித்தார். அதற்கான பணிகளையும் செயல்படுத்தி வருகிறார்.
அமெரிக்காவில் பைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி என 3 நிறுவனங்களின் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
அமெரிக்கர்கள் அனைவருக்கும் மே மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தப்படும் என அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இன்று முதல் ஏப்ரல் 19-ம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி பெறுவார்கள்.
அமெரிக்காவில் 3 வாரங்களுக்குள் 90 சதவீத பேருக்கு தடுப்பூசி போட உள்ளோம். ஊசி போடும் முகாம்கள் அவர்கள் வசிக்கும் 5 கிலோமீட்டர் தூரத்திற்குள் அமைக்கப்படும்.
17 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் தற்போது 40 ஆயிரம் முகாம்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X