search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் -ஜோ பைடன்

    நான் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராவேன் என்ற நம்பிக்கை உள்ளது என ஜோ பைடன் கூறினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவி ஏற்றபின் முதன் முறையாக வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    நான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு மக்களுக்காகவும், நாட்டின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதே எனது இலக்கு. எனது எதிர்பார்ப்பும் அதுதான்.

    நான் மீண்டும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கமலா ஹாரிஸ் 2-வது முறையாக அமெரிக்க துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என்றும் முழுமையாக எதிர்பார்க்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×