என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆஸ்திரேலியாவில் வெளுத்து வாங்கும் மழை... 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளப்பெருக்கு
Byமாலை மலர்21 March 2021 4:14 PM GMT (Updated: 21 March 2021 4:14 PM GMT)
கிழக்கு ஆஸ்திரேலியாவில் கனமழை பெய்து வருவதால் நாளை பல்வேறு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் தண்ணீரில் மிதக்கின்றன. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
வேகமாகப் பாய்ந்த வெள்ள நீர் பெரிய அளவில் சேதத்தை உண்டாக்கியதால் சிட்னியின் தென்மேற்குப் பகுதியில் வாழும் மக்கள், நள்ளிரவில், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவேண்டியிருந்தது. வெள்ளப்பெருக்கினால் பல முக்கியமான சாலைகள் மூடப்பட்டன. ஏராளமான பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸின் சுமார் 13 பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை வெளியிடப்பட்டது. அங்கிருந்து மக்கள் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
எதிர்பார்த்ததை விட அதிகமான மழை பெய்ததாகவும், இதனால் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாகவும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் கூறி உள்ளார். சிட்னியின் வடமேற்கின் சில பகுதிகளில் உள்ள மக்கள் நள்ளிரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இன்னும் 4,000 பேர் வெளியேற்றப்படலாம் என்றும் பெரெஜிக்லியன் கூறினார்.
தொடர் மழை காரணமாக, சிட்னியின் பிரதான நீர்வழங்கல் அணையான வார்ரகாம்பா உட்பட பல அணைகள் நிரம்பியதால், தண்ணீர் திறக்கப்பட்டு, ஆறுகளில் நீர்மட்டம் திடீரென அதிகரித்தது. கொந்தளிப்பான வானிலை காரணமாக, நியூ சவுத் வேல்சில் கொரோனா தடுப்பூசி போடும் பணி பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X