search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலநடுக்கம்
    X
    நிலநடுக்கம்

    ஜப்பானில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

    ஜப்பானில் அதிகாலை 4.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் தலைநகர் டோக்கியோவில் கட்டிடங்கள் குலுங்கின.
    டோக்கியோ:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி  அதிகாலை 4.56 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் தலைநகர் டோக்கியாவில் சில வினாடிகள் கட்டிடங்கள் குலுங்கியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியானது.

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை என முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது.
    Next Story
    ×