என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
2 தோல்விக்கு பின்னர் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ ராக்கெட் சோதனை வெற்றி
Byமாலை மலர்4 March 2021 9:25 PM GMT (Updated: 4 March 2021 9:25 PM GMT)
ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் அந்த நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ். பெரும் கோடீசுவரரான எலன் மஸ்க் இந்த அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு ஸ்டார்ஷிப் எஸ்.என்.10 என்ற ராக்கெட்டை நேற்று முன்தினம் விண்வெளியில் செலுத்தியது. இந்த ராக்கெட் 10 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று விட்டு வெற்றிகரமாக பூமிக்கு (டெக்சாஸ் மாகாணம், போகா சிகாவுக்கு) திரும்பியது.
அதே நேரத்தில் பூமியை தொட்ட 6 நிமிடங்களில் இந்த ராக்கெட் வெடித்து தீப்பற்றி எரிந்தது. 2 முறை ஏவி அந்த ராக்கெட்டுகளின் பயணம் தோல்வி கண்ட நிலையில் இந்த ராக்கெட் ஏவப்பட்டு, பூமிக்கு திரும்பியதில் வெற்றி காணப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஏவுதல் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் ராக்கெட் கிடைமட்டமாக இருக்கிறபோது அதை கட்டுப்படுத்த மடிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய தகவல்களை சேகரிப்பதுதான் இந்த ஏவுதலின் நோக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
எனவே இந்த ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு அமைப்பு ஸ்பேஸ் எக்ஸ். பெரும் கோடீசுவரரான எலன் மஸ்க் இந்த அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு ஸ்டார்ஷிப் எஸ்.என்.10 என்ற ராக்கெட்டை நேற்று முன்தினம் விண்வெளியில் செலுத்தியது. இந்த ராக்கெட் 10 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு சென்று விட்டு வெற்றிகரமாக பூமிக்கு (டெக்சாஸ் மாகாணம், போகா சிகாவுக்கு) திரும்பியது.
அதே நேரத்தில் பூமியை தொட்ட 6 நிமிடங்களில் இந்த ராக்கெட் வெடித்து தீப்பற்றி எரிந்தது. 2 முறை ஏவி அந்த ராக்கெட்டுகளின் பயணம் தோல்வி கண்ட நிலையில் இந்த ராக்கெட் ஏவப்பட்டு, பூமிக்கு திரும்பியதில் வெற்றி காணப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த ஏவுதல் வெற்றிகரமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் ராக்கெட் கிடைமட்டமாக இருக்கிறபோது அதை கட்டுப்படுத்த மடிப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய தகவல்களை சேகரிப்பதுதான் இந்த ஏவுதலின் நோக்கமாக இருந்தது என்று கூறப்படுகிறது.
எனவே இந்த ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியதில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பெரும் ஊக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X