என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென் ஆப்பிரிக்காவை துரத்தும் கொரோனா - பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியது
Byமாலை மலர்2 March 2021 6:28 PM GMT (Updated: 2 March 2021 6:28 PM GMT)
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
கேப் டவுன்:
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல்களை பற்றிய தகவல்கள் வெளிவந்தன.
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு தடுப்பு மருந்தை செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளது. ஆனாலும் உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா தற்போது 16-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,13,959 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பால் அங்கு பலி எண்ணிக்கை 50 ஆயிரத்து 077 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 14.31 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X