என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய குட்டி விமானம் - 3 பேர் பலி
Byமாலை மலர்27 Feb 2021 8:17 PM GMT (Updated: 27 Feb 2021 8:17 PM GMT)
அமெரிக்காவில் குட்டி விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
நியூயார்க்:
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட குட்டி விமானம் ஒன்று புறப்பட்டது. புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.
கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானி விமான நிலையம் அருகேயுள்ள சாலையில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் அவரது கட்டுக்குள் வராத விமானம் விமான நிலையத்தையொட்டிய குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரிலுள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட குட்டி விமானம் ஒன்று புறப்பட்டது. புளோரிடா மாகாணத்தின் டேடோனா கடற்கரை நோக்கி புறப்பட்ட இந்த விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணம் செய்தனர்.
கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானி விமான நிலையம் அருகேயுள்ள சாலையில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் அவரது கட்டுக்குள் வராத விமானம் விமான நிலையத்தையொட்டிய குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியாத நிலையில் இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X