search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    அமீரகத்தில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 19 பேர் பலி

    அமீரகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 19 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,164 ஆக உயர்ந்துள்ளது.
    அபுதாபி:

    அமீரகத்தில் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் செய்யப்பட்ட 1 லட்சத்து 79 ஆயிரத்து 229 டிபிஐ மற்றும் பிசிஆர் பரிசோதனை முடிவுகளில் 3 ஆயிரத்து 102 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 78 ஆயிரத்து 637 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் நேற்று மட்டும் 3 ஆயிரத்து 814 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 70 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று ஒரே நாளில் 19 பேர் பலியானார்கள். இதனால் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 1,164 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7 ஆயிரத்து 92 பேர் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கொரோனா பாதிப்பில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×