என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும்: இம்ரான் கான்
Byமாலை மலர்24 Feb 2021 3:02 PM GMT (Updated: 24 Feb 2021 3:02 PM GMT)
இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை சென்றுள்ளார். இலங்கை - பாகிஸ்தான் வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பேசிய இம்ரான் கான் ‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலுக்கு காஷ்மீர்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. பேச்சுவார்த்தை மூலமாகத்தான் இதை தீர்க்க முடியும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘‘எங்களுடைய ஒரே பிரச்சனை காஷ்மீர்தான். இதை பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்க்க முடியும். நான் ஆட்சிக்கு வந்த பின்னர், உடனடியாக அண்டை நாடான இந்தியாவின் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு, நம்முடைய வேறுபட்ட கருத்துக்களை பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க முடியும். அதை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தினேன்.
நான் அதில் வெற்றி பெறவில்லை, ஆனால் இறுதியில் உணர்வு மேலோங்கும் என்று நான் நம்புகிறேன். துணைக் கண்டம் வறுமையைச் சமாளிக்க வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதுதான் ஒரே வழி’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X