என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு- ஒருவர் உயிரிழப்பு
Byமாலை மலர்22 Feb 2021 3:15 AM GMT (Updated: 22 Feb 2021 3:15 AM GMT)
அமெரிக்காவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சமீபகாலமாக துப்பாக்கி கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது. அடுத்தடுத்து நடக்கும் துப்பாக்கி சூடு சம்பவம் பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது. நேற்று முன்தினம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று மிசவுரி மாநிலத்தில் உள்ள அமெரிக்கன் லெஜியன் கிளப்பில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் கேப் கிரார்டியுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற இருவரும் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் அங்கு பதற்றம் உருவானது. போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X