என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜப்பானில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அரசு
Byமாலை மலர்14 Feb 2021 10:01 AM GMT (Updated: 14 Feb 2021 10:01 AM GMT)
ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
டோக்கியோ:
ஜப்பானில் 4.10 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6772 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் நீடிக்கிறது. கொரோனாவின் மூன்றாவது அலை தொற்றும் பரவி வருகிறது.
கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 23ம் தேதி தொடங்க உள்ளதால், அதற்கு முன்பாக மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளை தணிக்கும் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளதாக ஜப்பானின் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இதுவே ஜப்பானில் பயன்பாட்டுக்கு வரும் முதல் தடுப்பூசி ஆகும்.
அடுத்த வார மத்தியில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்படும் என்றும், முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் பிரதமர் யோஷிஹைட் சுகா அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மத்தியில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தேவையான தடுப்பூசி மருந்துகளை பெற முடியும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X