search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவிஷீல்ட் தடுப்பூசி
    X
    கோவிஷீல்ட் தடுப்பூசி

    வங்காளதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

    வங்காளதேசத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
    டாக்கா:

    வங்காளதேசத்தில் நாடுமுழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதல் மாதத்தில் சுமார் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 

    கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இதுவரை 3,28,000 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற வங்காளதேச அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக தற்போது 50 லட்சம் தடுப்பூசிகள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசு சார்பில் வங்காளதேசத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

    வங்காளதேசத்தின் சுகாதாரத் துறை மந்திரி சாஹித் மாலிக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். 

    அதன்பின் பேசிய அவர், இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×