என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வங்காளதேசத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்
Byமாலை மலர்7 Feb 2021 11:39 PM GMT (Updated: 7 Feb 2021 11:39 PM GMT)
வங்காளதேசத்தில் பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது.
டாக்கா:
வங்காளதேசத்தில் நாடுமுழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. முதல் மாதத்தில் சுமார் 35 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இதுவரை 3,28,000 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் 3 கோடி கொரோனா தடுப்பூசிகளை பெற வங்காளதேச அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் முதற்கட்டமாக தற்போது 50 லட்சம் தடுப்பூசிகள் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் இந்திய அரசு சார்பில் வங்காளதேசத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.
வங்காளதேசத்தின் சுகாதாரத் துறை மந்திரி சாஹித் மாலிக் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
அதன்பின் பேசிய அவர், இந்தியாவின் கோவிஷீல்ட் தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்தது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை. வதந்திகளை நம்பாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X