என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக்கூடும்- ஆய்வில் தகவல்
Byமாலை மலர்7 Feb 2021 8:07 AM GMT (Updated: 7 Feb 2021 8:07 AM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
வாஷிங்டன்:
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தியது. வைரஸ் பரவுவது சில நாடுகளில் குறைந்து வந்த நிலையில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவில் உரு மாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவியது.
மரபணுவில் மாற்றம் அடைந்த இந்த வைரஸ் முன்பைவிட 70 சதவீதம் வேகமாக பரவும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே போல் உருமாறிய கொரோனாவால் அதிக உயிரிழப்பு மற்றும் பாதிப்புகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்தனர்.
இதனால் இங்கிலாந்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதே போல் ஐரோப்பிய நாடுகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. உருமாறிய கொரோனா அதிக வீரியம் மிக்கதாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளும் பலன் அளிக்காமல் போகலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உருமாறிய கொரோனா வைரஸ் ஏற்கனவே அந்நோயின் பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களை எளிதாக தாக்க வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரசை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம்.
தடுப்பு மருந்துகளை செலுத்தி ஆய்வு செய்த போது உருமாறிய கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இந்த தரவு உண்மையாக இருந்தால், தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதில் நாம் நெருக்கமாக இருக்கிறோம் என்ற எண்ணத்தில் இருந்து பொது மக்கள் பின்வாங்க நேரிடும் என்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X