என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது
Byமாலை மலர்7 Feb 2021 7:54 AM GMT (Updated: 7 Feb 2021 7:54 AM GMT)
இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாகவும், நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.
அவ்வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இன்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருந்து காபூல் சென்றடைந்தது. இத்தகவலை டுவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர். எப்போதும் நமது நட்பு நாடுகளுக்கு துணை நிற்போம் என்றும் அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X