search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடம் - ஜோ பைடன் எச்சரிக்கை

    ராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மர் மீது அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வாஷிங்டன்:

    மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. நோபல் பரிசு பெற்ற அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டார். மியான்மார் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில் மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியதாவது:-

    மியான்மரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது 'நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல்.  நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் இது.  

    மேலும் ஜனநாயக அரசாங்கத்திற்கு அமைதியான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் மத்தியில் பொருளாதார அபராதங்களை உயர்த்துவதற்கான 2016-ம் ஆண்டு முடிவை உடனடியாக மதிப்பாய்வு செய்யப்படும்.

    ராணுவம் ஆட்சி தொடர்ந்தால் மியன்மரில் மீண்டும் பொருளாதார தடைகளை விதிக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×