என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்
வாஷிங்டன்:
அமெரிக்காவின் மருத்துவத்துறை தலைவராக நியமிக்கப்பட இருப்பவர் டாக்டர் விவேக் மூர்த்தி. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:-
கொரோனா தொற்று கிருமி தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கும். அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும். பாதிப்பு ஏற்படும் போது தான்அதன் வகைகளை அடையாளம் காண முடியும்.
எனவே மரபணு ரீதியிலான சிறந்த கண்காணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். மக்கள் தொடர்ந்து கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
கொரோனா கிருமி உருமாறுவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. அதுதான் வைரசின் இயல்பு. பிரிட்டனிலும், தென் ஆப்பிரிக்காவிலும் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பிரேசிலில் கண்டறியப்பட்ட ‘பி.1’ கொரோனா ஆகியவை வேகமாக பரவும் தன்மை உடையவை.
இவற்றில் பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதுபற்றிய கூடுதல் தகவல்கள் தேவைப்படுகிறது.
இந்த பாதிப்பை திறம்பட எதிர்கொள்ள சிகிச்சை முறைகள் மேம்படுத்தப்பட வேண்டும். தொற்று பரவல் தொடர்பான விவரங்களை கண்டறிய தொடர் பரிசோதனை செய்ய அதிக முதலீடு தேவை.
அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவி ஏற்ற உடனே புதிய நிர்வாகம் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை அறிவித்தது.
அதிகமானோருக்கு விரைவாக தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காகவே இந்த இலக்கை அவர் வெளியிட்டார். இத்தனை பேருக்குத்தான் தடுப்பூசி போட வேண்டும் என்று வரையரை எதுவும் செய்யப்படவில்லை.
பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் மக்கள் முகக்கவசம் அணி வதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடு வதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்