search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெப்ப நிலையை பரிசோதிக்கும் ஊழியர்
    X
    வெப்ப நிலையை பரிசோதிக்கும் ஊழியர்

    பிரேசிலை விடாத கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 85 லட்சத்தைத் தாண்டியது

    பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்துள்ளது.
    ரியோ டி ஜெனிரோ:

    கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசில் 3-ம் இடத்தில் உள்ளது.

    பிரேசில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அங்கு வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 85 லட்சத்தைக் கடந்துள்ளது.

    ஒரே நாளில் 1160-க்கும் அதிகமானோர் பலியான நிலையில் அங்கு கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.11 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 75 லட்சத்தைக் கடந்துள்ளது. சுமார் 8.43 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×