என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓமன் வளைகுடாவில் போர் பயிற்சியை தொடங்கிய ஈரான்
Byமாலை மலர்19 Jan 2021 9:00 PM GMT (Updated: 19 Jan 2021 9:00 PM GMT)
அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சியை தொடங்கியது
டெஹ்ரான்:
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பதற்கு அமெரிக்காவில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக ஈரான் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சியை தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கும் நிலையில் ஈரான் இந்த போர்ப்பயிற்சியை தொடங்கி இருக்கிறது.
ராணுவ கமாண்டோ பிரிவுகள் மற்றும் வான் படை காலாட்படை ஆகியவை இந்த போர்ப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. மேலும் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈரான் தேசிய ராணுவ தலைவர் அப்துல் ரஹீம் மவ்சாவி இந்த போர்ப்பயிற்சியை மேற்பார்வையிட்டார்.
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடிக்கிறது. இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவை மீண்டும் இணைப்பதற்கு அமெரிக்காவில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக ஈரான் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஓமன் வளைகுடா பகுதியில் ஈரான் ராணுவம் நேற்று போர்ப் பயிற்சியை தொடங்கியது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கும் நிலையில் ஈரான் இந்த போர்ப்பயிற்சியை தொடங்கி இருக்கிறது.
ராணுவ கமாண்டோ பிரிவுகள் மற்றும் வான் படை காலாட்படை ஆகியவை இந்த போர்ப்பயிற்சியில் பங்கேற்றுள்ளன. மேலும் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவையும் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஈரான் தேசிய ராணுவ தலைவர் அப்துல் ரஹீம் மவ்சாவி இந்த போர்ப்பயிற்சியை மேற்பார்வையிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X